பொதிகை சாரல்



Saturday, September 24, 2011

அன்பையும் தானமாக கொடுக்கலாமே...

கண் தானம் ,உறுப்பு தானம் ஒருவர் இறந்த பிறகு கொடுப்பது ;இருக்கும் வரை ரத்ததானம் செய்கிறோம் அதைப்போலவே அன்பையும் கொடுக்கலாமே ?
அள்ள அள்ள குறையாதது அன்பு எங்கும் எப்போதும் ,யாராக இருந்தாலும் எப்போதுமே எதையும்  எதிர் பார்க்காத அன்பு புனிதமானது !

Share/Bookmark

Sunday, September 18, 2011

சாதனை மன்னர்கள் (மதில் சுவர் டிராவிட்)- மலர் 2

                                                             
டிராவிட்  ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் மறக்க முடியாத ஒரு பெயர் .விளையாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர் என்று சொல்லுவதை விட இவர் அவர்களில் சிறந்தவர் என்று சொன்னால் அதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் !
         புகழுக்காக , பணத்திற்காக மட்டும் ஆடாதவர் , அமைதியானவர் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
         உலக ஒருதின மற்றும் 20 -20 போட்டிகளிலிருந்து கடந்த வாரத்தில் ஓய்வு அறிவித்துவிட்ட டிராவிட் இன்னும் ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த வீரராக இருக்கிறார் .
        எப்படி சீனாவிற்கு  ஒரு சீனா பெருஞ்சுவரோ அப்படி கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத ஒரு மதில் சுவர் டிராவிட் - இனி யார் அவர் இடத்தை நிரப்புவார்கள் ?????
        

Share/Bookmark

Sunday, September 4, 2011

என்ன செய்கிறது ஐக்கியநாடுகள் சபை ?

விரைவில்...


ஒரு இனத்தின் திட்டமிட்ட அவலங்களும் ,அழிவுகளும் !



Share/Bookmark

நிறைகளைத் தேடும் மனிதனின் பயணம் ...இது சரிதானா ?

    நிறைகளை ஏற்றுக்கொள்ளவே நம்மில் பலர் எப்போதும் தயாராக      இருப்போம் .எதனையும் பெற்றுக்கொள்ளவே மனிதனின் கைகளும்,மனதுகளும் துடித்துக்கொண்டு இருக்கும் !வாழ்க்கை என்பது நிறைகளின்           சங்கமம்மா ?இல்லை வாழ்க்கை என்பது பெற்றுக்கொள்வதற்கு மட்டுமா ?
                இன்று அன்பு கூட சுயநல வலைக்குள்ளே சிக்கித்                             தவிக்கிறது !எதையாவது எதிர்பார்த்துதான் அன்பு இங்கே துளிர்க்கிறது! தனக்காக ,தன் இனத்திற்காக , தன் மொழிக்காக ,தன் மதத்திற்காக என்று அன்பின் எல்லைகள்  இங்கே சுருங்கிவிட்டன.
                                          
                   அதனாலதான் 6 அறிவு இருந்தும் கூட சக மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளத்தெரியாத மிருகத்தை விட கேவலமாக மனிதன் இருக்கிறான்!

Share/Bookmark

Saturday, September 3, 2011

மங்காத்தா ஒரு பார்வை...

     பணமும் அது செய்யும் விளையாட்டுகள் தான் மங்காத்தா !தனது மாஸ் ஹீரோ இடத்திலிருந்து இறங்கி வந்து நடித்திருக்கும் அஜித் , ஆக்சன் கிங் இடத்திலிருந்து இறங்கி வந்து நடித்த அர்ஜுன் இவர்கள் சில நடிகர்களோடு இணைந்து விளையாட்டும் பண விளையாட்டே மங்காத்தா !.


                                     

    இது ஒரு 50 ஓவர் விளையாட்டைப்போல இருப்பதால் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சபாஷ் போட வைக்கிறது .அஜித் ரசிகர்களை இப்படம் கவர்ந்து இழுப்பதில் ஆச்சர்யம் இருக்க முடியாது !
                                             
                3 பாடல்கள் நம்மையும் ஆட வைக்கின்றன .அங்கங்கே லாஜிக் இடித்தாலும் நன்றாகவே படம் பயணம் செய்கிறது .மங்காத்தா என்று சொல்லி பெரும்பாலும் கன் அண்ட் புல்லெட்டோடூ விளையாடி இருக்கிறார்கள் .புதுமுகம் இரு நடிகர்கள் நன்றாக நடித்து உள்ளார்கள் .பிரேம்ஜி வரும் இடங்கள் கல கலப்பு .
                                              
           படம் முடிந்த பிறகு ஒளி பரப்பப்படும்  ஷூட்டிங் காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கின்றன.மொத்தத்தில் மங்காத்தா அனைவரும் விளையாடக்கூடிய ஒரு ஜாலியான விளையாட்டு !









Share/Bookmark

Thursday, September 1, 2011

இந்தியா - பாகிஸ்தான் நட்பு ??!!

                                        
      பிரிந்து வாழ்வது நன்மை எனில் பிரிவு கூட உன்னதமானது ! ஆனால் இந்தியா -பாகிஸ்தான் பிரிவு?
             ஒரு சில ஆட்சியாளர்களின் அரசியல் விளையாட்டுகள் எப்படி தேசத்தின் ஒரே பார்வையாக இருக்க முடியும் ?அன்பு ,சமாதனம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு !மக்களை புறந்தள்ளி விட்டு யாருக்காக இந்த அரசியல்? எதிர்காலம் எல்லாம்?
                                                
             நாம் கைகோர்த்து நடந்தால் வருங்கால வரலாறு நம்மை விட்டு புதிதாக எதுவும் எழுதிவிட முடியாது !ஆனால் நாமோ மதத்தாலும்,அரசியல் காழ்ப்புனற்சியலும் வருங்கால நமது சந்ததியினரின் எதிர்காலத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் ?இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ?
                           
                         
            அந்நியனை விரட்டிய நமக்கு நம்மிடையே இருந்த காழ்ப்புனற்சியை விரட்ட முடியாதது  வெட்கப்படவேண்டியது என்பதையும் ,ஆயுதம் ஒருபொழுதும்  எதற்கும் தீர்வாகாது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம் .அன்புள்ளவர்கள் புரிந்து நடப்பார்கள் !

Share/Bookmark