பொதிகை சாரல்



Sunday, August 14, 2011

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.....

உலகமே சுதந்திர காற்றை ஆய்தத்தின் வழியே சுவாசித்தபோதும்,அஹிம்சையால் சுதந்திர காற்றை சுவாசித்த நாடு இந்தியா!

இன்று வரை அமைதி தீபத்தை மட்டுமே கைகளில் ஏந்தி ,வம்பு சண்டைகளுக்கு போகாத வந்த சண்டைகளை விடாத நாடு இந்தியா !

மதத்தால் ,மொழியால் ,இனத்தால் வேறுபட்டாலும் இந்தியாவிற்கு மட்டும் எப்போதும் இதயம் என்பது ஒன்றுதான் !

ஆனால் இன்று மதத்தாலும் ,மொழியாலும் ,இனத்தாலும் ,அரசியல் ஆதாயத்தாலும்,ஊழலாலும்,வறுமையாலும் ,தீவிரவாதத்தாலும் காயம் பட்டு  கிடைக்கிறது....

காயம் பட்ட நம் தேசத்தின் விடியல் எங்குள்ளது ??நாளைய எதிர்காலமான இளைனர்களின் கைகளில்தான்!எப்படி வயோதிக காலத்தில் பெற்றோரின் வாழ்க்கை பிள்ளைகளின் வசமோ ?அதைபோல் தான் நம் தேசத்தின் வாழ்க்கையும் இளைனர்களின் கைகளில் மட்டும் தான் என்றால் மிகையில்லை !

காலமாற்றம் நம் சுதந்திரத்தின் வலிகளை மறக்க செய்திருக்கலாம்,நவீன உலகில் என் இளைனன் சுதந்திரத்தின் பின்னே உள்ள வலிகளை உணர வாய்ப்பு இல்லாமல் இருந்து  இருக்கலாம் ஆனால் சுதந்திர காற்றின் பின்னே உள்ள வலிகளையும் மறந்திடகூடாது,அப்போதுதான் சுதந்திரத்தின் சந்தோசம் என்றும் நிலைத்து இருக்கும் !!!!







Share/Bookmark