பொதிகை சாரல்
Saturday, October 27, 2012
பீட்சா - திரை விமர்சனம்
ஒரு ஊரில் ஒரு பேய் பங்களா,அங்கெ சென்றவர்கள் எல்லாம் மாயம் - என்ற வரிகளை நீங்கள் சிறுவயதில் கேட்டு இருக்கலாம்!
அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு பீட்சா பையன் ,அவன் காதலி என்று திரைக்கதையை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்கள் !
வசனம் ஒவ்வொன்றும் கண கச்சிதம்.
பீட்சா பையன் தன் காதலியை கரம் பிடித்தாரா ? பீட்சா பையனின் கடை முதலாளி என்ன பிசினஸ் செய்கிறார்? அவர் பொண்ணுக்கு பிடித்திருப்பது பேயா?
ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் கதாநாயகி ஒரு பேயா? இது போன்ற பல கேள்விகளுக்கு நல்ல திருப்பங்களுடன் படம் நகர்ந்து இறுதியில் கூட
திகிலோடு முடிகிறது.
இதயம் பலகீனம் உள்ளவர்கள் தவிர அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு த்ரில்ளீர் படம் நம்ம பீட்சா!
மொத்தத்தில் இந்த பீட்சா ஒரு தமிழனின் கற்பனை திரையில் தந்த சுவையான உணவு!
பீட்சா - சபாஷ் ரகம்!
Saturday, October 20, 2012
தமிழகத்தில் கனமழை:
தமிழகத்திற்கு பெரும் தண்ணீரைக் கொடுப்பது வட கிழக்கு பருவ மழை என்பது அனைவரும் அறிந்ததே. வட கிழக்கு பருவ மழை இப்பொழுதுதான் பெய்யும் என்பதை ஓரளவு அறுதி இட்டுச் சொல்லக் கூடிய அறிவியல் உலகத்தில் நாம் இன்று இருக்கிறோம்! இருந்தும் ஏன் இத்தனை தொய்வு
மழை நீர் எங்கு செல்வது என்று தெரியாமல் சென்னையில் மழை நீர் அங்கங்கே சாலைகளில் தேங்கி உள்ளது!
டெங்கு வேறு பரவும் இந்த சமயத்தில் இவ்வாறு நடப்பதுதான் அழகா ? அரசு முன் ஏற்பாடோடு இருக்க வேண்டாமா?
வந்த பின்பு காப்பது மட்டும் அரசு அல்ல,வரும் முன் காப்பதே நல்ல அரசு !
தமிழகத்தில் கனமழை:
Saturday, October 13, 2012
இருவகை மனிதர்கள்:
Sunday, October 7, 2012
தொடரும் சோகம்!
எது தீவிர வாதம் ,எது சுந்தந்திரப் போராட்டம் என்பதை 21 ஆம்
நூற்றாண்டிலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாத படி இந்த உலகில் அரசியல்
ஆட்சி செய்கிறது.அதற்க்கு கண்ணீர்த் தீவே சாட்சி!
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்றோ போன அந்த மக்களிடத்தில் சமீப காலத்தில் கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லை, இவ்வளவு ஏன் நம்பிக்கை மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை!
உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத உயிர்கள் பிணங்களாக வாழும் இடத்தில், வலிகளை பொறுத்துக் கொண்டு பிணங்களை போல உயிர் வாழ்கின்ற மக்கள்.
ஒற்றுமை இல்லாது போனதால்,எதிர் காலமும் கேள்விக் குறியாய்ப் போன தேசிய இனம்!
யார் புரிந்து கொள்வார்கள்? யார் தீர்த்து வைப்பார்கள்? கேள்விகளே அதிகம்! இங்கே தொடரும் சோகம்!
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்றோ போன அந்த மக்களிடத்தில் சமீப காலத்தில் கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லை, இவ்வளவு ஏன் நம்பிக்கை மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை!
உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத உயிர்கள் பிணங்களாக வாழும் இடத்தில், வலிகளை பொறுத்துக் கொண்டு பிணங்களை போல உயிர் வாழ்கின்ற மக்கள்.
ஒற்றுமை இல்லாது போனதால்,எதிர் காலமும் கேள்விக் குறியாய்ப் போன தேசிய இனம்!
யார் புரிந்து கொள்வார்கள்? யார் தீர்த்து வைப்பார்கள்? கேள்விகளே அதிகம்! இங்கே தொடரும் சோகம்!
தொடரும் சோகம்!
Saturday, September 29, 2012
தீண்டாமையில் ஏன் இவ்வளவு பித்தலாட்டம்?
பிறப்பில் சிலர் உயர்ந்தவர் என்றும் , தாழ்ந்தவர் என்றும் நிர்ணயிக்கும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?
கடவுளா என்றால் அதற்கும் சரியான தகவல் இல்லை .ஏன் என்றால் இங்கே கடவுளில் கூட இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இருக்கிறதே ?
கீழ் சாதிக்காரனை கோவிலுக்கு வர அனுமதிக்காத இந்த சமூகம் ,அவர்கள் தரும் காணிக்கையை மட்டும் அனுமதிப்பது எவ்வாறு?
தாழ்ந்த சாதிகாரனை உயர்ந்த பதவியில் அமர்த்திப் பார்க்காத இந்த சமூகம் ,அவனிடம் இருக்கும் வாக்குரிமைக்காக பிச்சை எடுப்பதை விட கேவலமாக நிற்கும் போது எங்கே போனது இந்த சாதி ? ஏன் கூலி வேலைக்காக தாழ்ந்த சாதிகரனை பணிக்கு அமர்த்த வேண்டும்?அப்பொழுது ஒட்டாதா அந்த சாதி?
என்ன இது வேடிக்கை ? ஏன் இந்த கீழ்த்தனம்?
ஒன்று மட்டும் தெரிகிறது ,தனக்கு அடிமையாய் இருப்பவன் நாளை நமக்கு சரிசமமாக வரக்கூடாது என்ற கேவல எண்ணமே இந்த சாதியை உருவாக்கி இருக்கிறது ,பின்னாடி வரும் சந்ததி அதை தொடர்கிறது ?
உண்மையில் கீழ் சாதி எனப்படுபவன் , சாதி என்ற நோயால் பாதிக்கப் பட்ட மிருகம் !
தீண்டாமையில் ஏன் இவ்வளவு பித்தலாட்டம்?
Wednesday, September 5, 2012
படிக்க தவறாதீர்கள் !
இலங்கை மக்கள் தாக்கப்பட்ட செய்தியும்
அதனை ஒட்டி தினமணி வெளியிட்ட தலையங்கமும்
அதன் மீதான மூன்றாவது பார்வையும் !
சர்வதேச அரசியலில் இறங்குவோம் ,உணர்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு இன்னும் நிதானமாக , ஆழமாக !
என்ற புதிய கட்டுரை உங்கள் தமிழ் கவிதை அருவியில் ! படிக்க தவறாதீர் !
http://tamilodupayanam.blogspot.in/
(இந்த லிங்கை சொடுக்கி (கிளிக் செய்து ) படியுங்கள் !)
அதனை ஒட்டி தினமணி வெளியிட்ட தலையங்கமும்
அதன் மீதான மூன்றாவது பார்வையும் !
சர்வதேச அரசியலில் இறங்குவோம் ,உணர்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு இன்னும் நிதானமாக , ஆழமாக !
என்ற புதிய கட்டுரை உங்கள் தமிழ் கவிதை அருவியில் ! படிக்க தவறாதீர் !
http://tamilodupayanam.blogspot.in/
(இந்த லிங்கை சொடுக்கி (கிளிக் செய்து ) படியுங்கள் !)
படிக்க தவறாதீர்கள் !
Sunday, September 2, 2012
பாரதி வேறில்லை ! தமிழ் வேறில்லை !
யாமறிந்த புலவரில் கம்பனைப் போல
வள்ளுவர் போல
இளங்கோவைப் போல
பூமிதனில் யாரையும் பார்த்ததில்லை என்கிறாய் !
என்னே தன்னடக்கம் !
பாரதியே
இது உண்மை
அவர்கள் எல்லாம் உன் கவிதையைப்
படித்திருந்தால்
பாரதி வேறில்லை , தமிழ் வேறில்லை
என்று சொல்லி இருப்பார்கள் !
உண்மை இது பாரதி !
@பொதிகை சாரல்
வள்ளுவர் போல
இளங்கோவைப் போல
பூமிதனில் யாரையும் பார்த்ததில்லை என்கிறாய் !
என்னே தன்னடக்கம் !
பாரதியே
இது உண்மை
அவர்கள் எல்லாம் உன் கவிதையைப்
படித்திருந்தால்
பாரதி வேறில்லை , தமிழ் வேறில்லை
என்று சொல்லி இருப்பார்கள் !
உண்மை இது பாரதி !
@பொதிகை சாரல்
பாரதி வேறில்லை ! தமிழ் வேறில்லை !
Monday, May 28, 2012
நட்பே...விதிவிலக்கே!
Saturday, May 12, 2012
தமிழ் இனி மெல்லச் சாகும்?! - தொடர் 1
உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று என்பது நாம் அறிந்ததே (தமிழ் பேசும் மக்கள் இதனை அறிந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன் ).
உலகில் இப்போது பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில் ,அந்த அந்த மொழிகளை தங்கள் பெயராகவோ,தங்கள் குழந்தையை தாலாட்டும் தாலாட்டுப் பாடல்களிலோ ,தங்கள் காதலியை புகழ்ந்து பேசும் பொழுதோ ,நாட்டுப் புறப் பாடல்களிலோ ,அறு சுவைகளிலோ மொழியின் பெயரை வைத்து இருப்பார்களோ என்று யாரும் சொன்னதாக தெரிய வில்லை.
உதாரணத்திற்கு தமிழ் அரசன்,தமிழ்ச் செல்வன் ,தமிழ் அரசி என்ற பெயரில் தமிழ் என்பது மொழியை குறிக்கும்.வேறு எந்த மொழி பேசுவர்களும் அந்த மொழியின் பெயரை தங்கள் பெயராக வைத்து கொண்டதாக படித்ததில்லை.
அதே போல தமிழின் சுவை போல என்று கவிஞர்கள் கூறி கேட்டு இருக்கலாம் .உண்மையில் மொழிக்கு சுவை உண்டா?காதலர்கள் கூட
தன் காதலியை "அவள் தமிழ் போல் அழகு " என்று சொல்லுவார்கள் .மொழிக்கு என்ன மனிதனை போல உடல் இருக்கிறதா?
சிந்தியுங்கள் இன்னும் பேசுவோம்.
அதே போல தமிழின் சுவை போல என்று கவிஞர்கள் கூறி கேட்டு இருக்கலாம் .உண்மையில் மொழிக்கு சுவை உண்டா?காதலர்கள் கூட
தன் காதலியை "அவள் தமிழ் போல் அழகு " என்று சொல்லுவார்கள் .மொழிக்கு என்ன மனிதனை போல உடல் இருக்கிறதா?
சிந்தியுங்கள் இன்னும் பேசுவோம்.
தமிழ் இனி மெல்லச் சாகும்?! - தொடர் 1
Saturday, March 10, 2012
நலம் அறிய ஆவல் - அம்மா !
சோதனைகள் தரும் கடவுளும் உண்டு
நலன்கள் மட்டுமே இதயத்தில் உண்டு
என் நலன்கள் மட்டுமே என்றும்
அவள் இதயத்தில் உண்டு
தொப்புள் கொடி அருந்த பொழுதும்
பாதுகாப்பாய் இருப்பதாய் நான்
என்றும் நினைப்பது உண்டு
அதற்குப் பின்னால் என் தாயே உண்டு !
மறு பிறவி ஒன்று இருப்பதை
பலர் சொல்வதுண்டு அதிலே
உன்னை சுமக்க எனக்கு ஆசையும் உண்டு !
நலன்கள் மட்டுமே இதயத்தில் உண்டு
என் நலன்கள் மட்டுமே என்றும்
அவள் இதயத்தில் உண்டு
தொப்புள் கொடி அருந்த பொழுதும்
பாதுகாப்பாய் இருப்பதாய் நான்
என்றும் நினைப்பது உண்டு
அதற்குப் பின்னால் என் தாயே உண்டு !
மறு பிறவி ஒன்று இருப்பதை
பலர் சொல்வதுண்டு அதிலே
உன்னை சுமக்க எனக்கு ஆசையும் உண்டு !
நலம் அறிய ஆவல் - அம்மா ! |
நலம் அறிய ஆவல் - அம்மா !
Tuesday, February 21, 2012
கேட்டதில் பிடித்தது
Saturday, February 18, 2012
முற்ப்பொழுதும் உன் கற்பனை
Friday, February 17, 2012
மழலை மொழி
மெல்ல நகருது தமிழகம் இனி வரப்போவது பாலை நிலம் !
மலை சார்ந்த குறுஞ்சி
இப்போது கற்குவியல் ஆகி கொண்டிருக்க
காடுகள் சார்ந்த முல்லை
இன்று தன் முகவரியை இழந்து கொண்டிருக்க
வயல்கள் சார்ந்த மருதம்
இன்று வியாபார நிலமாகிட
கடல்கள் சார்ந்த நெய்தல்
இன்று மாசுபட்டு கொண்டிருக்க
மெல்ல நகருது தமிழகம்
இனி வரப்போவது பாலை நிலம் !
இப்போது கற்குவியல் ஆகி கொண்டிருக்க
காடுகள் சார்ந்த முல்லை
இன்று தன் முகவரியை இழந்து கொண்டிருக்க
வயல்கள் சார்ந்த மருதம்
இன்று வியாபார நிலமாகிட
கடல்கள் சார்ந்த நெய்தல்
இன்று மாசுபட்டு கொண்டிருக்க
மெல்ல நகருது தமிழகம்
இனி வரப்போவது பாலை நிலம் !
மெல்ல நகருது தமிழகம் இனி வரப்போவது பாலை நிலம் !
நிலா எங்கும் உன் உலா !
வெற்றியும் தோல்வியும்!
Saturday, February 4, 2012
உற்சாக தூறல் -தமிழில் பிறந்த நாள் வாழ்த்து
Friday, February 3, 2012
ஒரே ஜனநாயகத்தின் இருவிழிப் பார்வை
Thursday, February 2, 2012
மௌன குரு - விமர்சனம்
Tuesday, January 31, 2012
புத்தன்,மனிதன் ,தலைவன் !
Sunday, January 29, 2012
ஈரம்
Subscribe to:
Posts (Atom)