பொதிகை சாரல்



Sunday, August 28, 2011

முகமூடிகள் - தொடர் எண் 1

இந்த உலகமே ஒரு நாடக மேடை ;
அதில் நாம் ஒவ்வொருவரும் நடிகர் , நடிகையர்  என்றார் சேக்ஸ்பியர் .இன்று நம்மை சுற்றிலும் ,ஏன் பல நேரங்களில் நமக்குள்ளும் நாம் இந்த முகமூடிகளை அணிந்து கொண்டுதான் இருக்கின்றோம் மறுப்பதற்கு இல்லை .
                                          
      அப்படிப்பட்ட நம்மோடு பயணிக்கின்ற முகமூடிகளை பற்றி பேசுவோம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்"  என்று முன்னூறு  ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன, ஏன் வாழ்ந்த ஒரு இனத்திற்கு தன்னோடு விடுதலை போராட்டம் நடத்திய ஒரு இனம் சம உரிமை தருகிறேன் என்று சொல்லி ,நாம் ஒன்றாக நாட்டை ஆள்வோம் என்று சொல்லி இன்று சொந்த நாட்டிலே ஒரு அகதிகளாய் மாற்றிய அந்த பேரினவாதிகள் உண்மையில் முகமூடிகள் வேய்ந்த இதயமற்றவர்கள்!
   அன்பின் கருணையான வடிவிலே உள்ள புத்தருக்கும் அவர்கள் இன்று வலுக்கட்டாயமாக முகமூடிகள் போட்டு இருக்கிறார்கள் என்பதை உலகம் மறக்கலாம் ஆனால் தமிழரின் கல்லறைகள் கூட மறந்துவிடக்கூடாது !
                                                                           முகமூடிகள் இன்னும் அணிவோம் .......                               

Share/Bookmark

அன்னை தெரசா அவர்களின் தினசரி பிராத்தனை...


இறைவா அமைதியின் கருவியாய் என்னை ஆக்கி அருளும் ;
பகை உள்ள இடத்தில அன்பையும் ;
தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும் ;
பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும் ;
ஐயமுள்ள இடத்தில் உறுதியையும் ;
விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையும் ;
இருள் உள்ள இடத்தில் ஒளியையும் ;
மருள் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்;
நான் விதைப்பேனாக!

   -பிராத்தனை கூட அன்பு கலந்ததாள்தான் தெரசா இன்று உலகம் மதிக்கும் அன்னையானார் !



















Share/Bookmark

நேர் எதிர் பக்கத்தில்

மனசாட்சியைக்  கொன்றுவிட்டு ,
நீங்கள் பெற்ற  வெற்றி ;
எப்படி வரலாற்றின் பதிவுகளில்
வெற்றி  என்று பதிவு செய்யப்படுகிறதோ ?
 அதே வரலாற்றின் நேர் எதிர் பக்கங்களில்
ஒரு தேசிய இனத்தின் மோசமான அழிவையும்
 நிச்சயம் பதிவு செய்யும் !












Share/Bookmark